நூல்கள்›நற்றிணை›பாடல் 1543

பாடல் 1543

கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்

அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி,

'கன்று கால்யாத்த மன்றப் பலவின்

வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்

குழவிச் சேதா மாந்தி, அயலது

வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் . . . .

பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?' என,

சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென

கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த

செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக்

கொய் புனம் காவலும் நுமதோ? . . . .

கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே!

குறிஞ்சி

← பாடல் 1542பாடல் 1544 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்