நூல்கள்›நற்றிணை›பாடல் 1542

பாடல் 1542

குடவாயிற் கீரத்தனார்

பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,

நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ விளி

சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்

நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்

கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர் . . . .

நெடும் பெருங் குன்றம் நீந்தி, நம் வயின்

வந்தனர்; வாழி - தோழி! - கையதை

செம் பொன் கழல்தொடி நோக்கி, மா மகன்

கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும்,

அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே. . . . .

பாலை

← பாடல் 1541பாடல் 1543 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்