நூல்கள்›நற்றிணை›பாடல் 1536

பாடல் 1536

ஐயூர் முடவனார்

'துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி,

தோடு அலைக் கொண்டன ஏனல் என்று,

துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ,

செவ் வாய்ப் பாசினம் கவரும்' என்று, அவ் வாய்த்

தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க' என . . . .

எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும்,

'நல் நாள் வேங்கையும் மலர்கமா, இனி' என

என் முகம் நோக்கினள்; எவன்கொல்?- தோழி!-

செல்வாள் என்றுகொல்? 'செறிப்பல்' என்றுகொல்?

கல் கெழு நாடன் கேண்மை . . . .

அறிந்தனள்கொல்? அஃது அறிகலென் யானே!

குறிஞ்சி

← பாடல் 1535பாடல் 1537 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்