நூல்கள்›நற்றிணை›பாடல் 1517

பாடல் 1517

அவ்வையார்

நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக,

கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய,

பல் பூங் கானலும் அல்கின்றன்றே;

இன மணி ஒலிப்ப, பொழுது படப் பூட்டி,

மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய, . . . .

தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு

யாங்கு ஆவதுகொல் தானே- தேம் பட

ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்,

மின் இவர் கொடும் பூண், கொண்கனொடு

இன் நகை மேவி, நாம் ஆடிய பொழிலே? . . . .

நெய்தல்

← பாடல் 1516பாடல் 1518 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்