நூல்கள்›நற்றிணை›பாடல் 1450

பாடல் 1450

மாங்குடி கிழார்

தட மருப்பு எருமை மட நடைக் குழவி

தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல்,

கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை

சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப,

வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ, . . . .

புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப்

பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்

அம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து,

அட்டிலோளே அம் மா அரிவை-

எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பாள் அன்று, . . . .

சிறு முள் எயிறு தோன்ற

முறுவல் கொண்ட முகம் காண்கம்மே.

மருதம்

← பாடல் 1449பாடல் 1451 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்