நூல்கள்›நற்றிணை›பாடல் 1441

பாடல் 1441

ஆசிரியர் அறியப்படவில்லை

அத்த இருப்பைப் பூவின் அன்ன

துய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்,

வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர்,

மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார்

வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு, . . . .

திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி,

வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி,

நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும்

பெருங் கழிப் பாக்கம் கல்லென

வருமே- தோழி!- கொண்கன் தேரே. . . . .

நெய்தல்

← பாடல் 1440பாடல் 1442 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்