நூல்கள்›நற்றிணை›பாடல் 1386

பாடல் 1386

பெருவழுதி

குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ

வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய,

கண் களி பெறூஉம் கவின் பெறு காலை,

எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச்

சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா, . . . .

ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்கொல்லோ

அருளான் ஆதலின், அழிந்து இவண் வந்து,

தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி,

'ஏதிலாட்டி இவள்' எனப்

போயின்று கொல்லோ, நோய் தலைமணந்தே . . . .

பாலை

← பாடல் 1385பாடல் 1387 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்