நூல்கள்›நற்றிணை›பாடல் 1348

பாடல் 1348

பொய்கையார்

பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல

வருவர் வாழி- தோழி!- மூவன்

முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்,

கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல்

தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை, . . . .

நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்

திரை தபு கடலின் இனிது கண் படுப்ப,

கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத்

தடாஅ நிலை ஒரு கோட்டன்ன,

ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே. . . . .

பாலை

← பாடல் 1347பாடல் 1349 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்