நூல்கள்›நற்றிணை›பாடல் 1340

பாடல் 1340

ஆசிரியர் அறியப்படவில்லை

அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,

பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த

நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,

நீத்தல் ஓம்புமதி- பூக் கேழ் ஊர!

இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க் . . . .

கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,

வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்

பழையன் வேல் வாய்த்தன்ன நின்

பிழையா நல் மொழி தேறிய இவட்கே.

பாலை

← பாடல் 1339பாடல் 1341 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்