நூல்கள்›கலித்தொகை›பாடல் 1866

பாடல் 1866

அரிதே, தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்;

பெரிதே காமம்; என் உயிர் தவச் சிறிதே;

பலவே யாமம்; பையுளும் உடைய;

சிலவே, நம்மோடு உசாவும் அன்றில்;

அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப, உலமந்து, . . . .

எழில் எஞ்சு மயிலின் நடுங்கி, சேக்கையின்

அழல் ஆகின்று, அவர் நக்கதன் பயனே;

மெல்லிய நெஞ்சு பையுள் கூர, தம்

சொல்லினான் எய்தமை அல்லது, அவர் நம்மை

வல்லவன் தைஇய, வாக்கு அமை கடு விசை . . . .

வில்லினான் எய்தலோ இலர்மன்; ஆயிழை!

வில்லினும் கடிது, அவர் சொல்லினுள் பிறந்த நோய்,

நகை முதலாக, நட்பினுள் எழுந்த

தகைமையில் நலிதல் அல்லது, அவர் நம்மை

வகைமையின் எழுந்த தொல் முரண் முதலாக, . . . .

பகைமையின் நலிதலோ இலர்மன்; ஆயிழை!

பகைமையிற் கடிது, அவர் தகைமையின் நலியு நோய்,

நீயலேன்' என்று என்னை அன்பினால் பிணித்து, தம்

சாயலின் சுடுதல் அல்லது, அவர் நம்மைப்

பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடுஞ் சுடர்த் . . . .

தீயினால் சுடுதலோ இலர்மன்; ஆயிழை!

தீயினும் கடிது, அவர் சாயலின் கனலும் நோய்;

ஆங்கு

அன்னர் காதலராக, அவர் நமக்கு

இன் உயிர் பேர்த்தரும் மருத்துவர் ஆயின், . . . .

யாங்கு ஆவதுகொல்? தோழி! எனையதூஉம்

தாங்குதல் வலித்தன்று ஆயின்,

நீங்கரிது உற்ற அன்று, அவர் உறீஇய நோயே.

நெய்தற் கலி

← பாடல் 1865பாடல் 1867 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்