நூல்கள்›கலித்தொகை›பாடல் 1854

பாடல் 1854

'கண்டவர் இல்' என, உலகத்துள் உணராதார்,

தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,

நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், 'அறிபவர்

நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,'

வண் பரி நவின்ற வய மான் செல்வ! . . . .

நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால்,

'அன்பு இலை' என வந்து கழறுவல்; ஐய! கேள்;

மகிழ் செய் தேமொழித் தொய்யில் சூழ் இள முலை

முகிழ் செய முள்கிய தொடர்பு, அவள் உண்கண்

அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்! . . . .

இமிழ் திரைக் கொண்க! கொடியைகாண் நீ

இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ,

நலம் செல நல்கிய தொடர்பு, அவள் சாஅய்ப்

புலந்து அழ, புல்லாது விடுவாய்!

இலங்கு நீர்ச் சேர்ப்ப! கொடியைகாண் நீ; . . . .

இன் மணிச் சிலம்பின் சில் மொழி ஐம்பால்

பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல்

நுண் வரி வாட, வாராது விடுவாய்!

தண்ணந் துறைவ! தகாஅய்காண் நீ;

என ஆங்கு . . . .

அனையள் என்று, அளிமதி, பெரும! நின் இன்று

இறை வரை நில்லா வளையள் இவட்கு, இனிப்

பிறை ஏர் சுடர் நுதற் பசலை

மறையச் செல்லும், நீ மணந்தனை விடினே.

நெய்தற் கலி

← பாடல் 1853பாடல் 1855 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்