நூல்கள்›கலித்தொகை›பாடல் 1799

பாடல் 1799

மணி நிற மலர்ப் பொய்கை, மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்

அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தென,

கதுமென, காணாது, கலங்கி, அம் மடப் பெடை

மதி நிழல் நீருள் கண்டு, அது என உவந்து ஓடி,

துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு, மிக நாணி, . . . .

பல் மலரிடைப் புகூஉம் பழனம் சேர் ஊர! கேள்:

நலம் நீப்பத் துறந்து எம்மை, நல்காய் நீ விடுதலின்,

பல நாளும் படாத கண், பாயல் கொண்டு, இயைபவால்;

துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட,

மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே . . . .

அகல நீ துறத்தலின், அழுது ஓவா உண்கண், எம்

புதல்வனை மெய் தீண்ட, பொருந்துதல் இயைபவால்;

நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்

தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே

வாராய் நீ துறத்தலின், வருந்திய எமக்கு, ஆங்கே . . . .

நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால்;

நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்

தேர் பூண்ட நெடு நல் மான் தௌ஢ மணி வந்து எடுப்புமே;

என ஆங்கு

மெல்லியான் செவிமுதல் மேல்வந்தான் காலை போல், . . . .

எல்லாம் துயிலோ எடுப்புக நின் பெண்டிர்

இல்லின் எழீஇய யாழ் தழீஇ, கல்லா வாய்ப்

பாணன் புகுதராக் கால்!

மருதக் கலி

← பாடல் 1798பாடல் 1800 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்