நூல்கள்›கலித்தொகை›பாடல் 1738

பாடல் 1738

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,

உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்,

நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்

குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!-

வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை, . . . .

என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,

தம்முள்ளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;

அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!'

'காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை;

ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய . . . .

மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்;

பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,

மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?

நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை, . . . .

நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?

தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,

யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?

சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! . . . .

எனவாங்கு,

இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;

சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;

அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே.

பாலைக் கலி

← பாடல் 1737பாடல் 1739 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்