நூல்கள்›நற்றிணை›பாடல் 1651

பாடல் 1651

மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை

பாடு இன் தௌ மணித் தோடு தலைப்பெயர,

கான முல்லைக் கய வாய் அலரி

பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய,

கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை . . . .

புல்லென் வறு மனை நோக்கி, மெல்ல

வருந்தும்கொல்லோ, திருந்துஇழை அரிவை?

வல்லைக் கடவுமதி தேரே; சென்றிக,

குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற,

பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே . . . .

முல்லை

← பாடல் 1650பாடல் 1652 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்