நூல்கள்›நற்றிணை›பாடல் 1448

பாடல் 1448

பாலை பாடிய பெருங்கடுங்கோ

அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்

தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்,

சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில்

புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்,

'அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர்' என, . . . .

இணர் உறுபு, உடைவதன்தலையும் புணர்வினை

ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய

துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி

வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி,

புது மலர் தெருவுதொறு நுவலும் . . . .

நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே!

பாலை

← பாடல் 1447பாடல் 1449 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்