நூல்கள்›நற்றிணை›பாடல் 1346

பாடல் 1346

சிறைக்குடி ஆந்தையார்

புணரின் புணராது பொருளே; பொருள்வயிற்

பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்

செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்கு

உரியை- வாழி, என் நெஞ்சே!- பொருளே,

வாடாப் பூவின் பொய்கை நாப்பண் . . . .

ஓடு மீன் வழியின் கெடுவ; யானே,

விழுநீர் வியலகம் தூணிஆக

எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்,

கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்

அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்; . . . .

எனைய ஆகுக! வாழிய பொருளே!

பாலை

← பாடல் 1345பாடல் 1347 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்