நூல்கள்›நற்றிணை›பாடல் 1331

பாடல் 1331

கபிலர்

நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;

என்றும் என் தோள் பிரிபு அறியலரே'

தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,

புரைய மன்ற, புரையோர் கேண்மை; . . . .

நீர் இன்று அமையா உலகம் போலத்

தம் இன்று அமையா நம் நயந்தருளி,

நறு நுதல் பசத்தல் அஞ்சிச்

சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!

குறிஞ்சி

← பாடல் 1330பாடல் 1332 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்