நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1535

குறள் 1535

இளநாகனார்

அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,

ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்

பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி

ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்

துன் அருங் கானம் என்னாய், நீயே . . . .

குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய,

ஆள்வினைக்கு அகறிஆயின், இன்றொடு

போயின்றுகொல்லோ தானே- படப்பைக்

கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்

நீர் மலி கதழ் பெயல் தலைஇய . . . .

ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே!

பாலை

← குறள் 1534குறள் 1536 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்