நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1503

குறள் 1503

ஆசிரியர் அறியப்படவில்லை

சுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும்,

மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும்,

தன் வழிப் படூஉம் நம் நயந்தருளி,

வெறி என உணர்ந்த அரிய அன்னையை,

கண்ணினும் கனவினும் காட்டி, 'இந் நோய் . . . .

என்னினும் வாராது; மணியின் தோன்றும்

அம் மலை கிழவோன் செய்தனன் இது' எனின்,

படு வண்டு ஆர்க்கும் பைந் தார் மார்பின்

நெடு வேட்கு ஏதம் உடைத்தோ?-

தொடியோய்! கூறுமதி, வினவுவல் யானே. . . . .

குறிஞ்சி

← குறள் 1502குறள் 1504 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்