நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1390

குறள் 1390

தூங்கலோரியார்

மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின்

பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ!

கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்,

கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு

புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு . . . .

கவர் படு கையை கழும மாந்தி,

நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின்

நடுநரொடு சேறிஆயின், அவண்

சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம்மில்

மா இருங் கூந்தல் மடந்தை . . . .

ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே.

மருதம்

← குறள் 1389குறள் 1391 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்