நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1347

குறள் 1347

நொச்சிநியமங்கிழார்

நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து,

மால் கடல் திரையின் இழிதரும் அருவி

அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி,

தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு

ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை, . . . .

'எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு' என,

மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து,

உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து,

உரைத்தல் உய்ந்தனனே- தோழி!- சாரல்,

காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி . . . .

தீம் தொடை நரம்பின் இமிரும்

வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே.

குறிஞ்சி

← குறள் 1346குறள் 1348 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்