நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1338

குறள் 1338

ஆசிரியர் அறியப்படவில்லை

அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,

பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,

திரு மணி புரையும் மேனி மடவோள்

யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!

துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் . . . .

அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்

தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள்

கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்

திண் தேர்ப் பொறையன் தொண்டி-

தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே! . . . .

குறிஞ்சி

← குறள் 1337குறள் 1339 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்